.
நம்பிக்கையைத் தொலைத்த ஒரு இரவில்
வானத்தைப் பார்த்தபடி நான்..
மேகத் திரைச்சேலையின்பின் நின்றபடி
எட்டிப் பார்க்கிறது நிலவு
அது யுகம் யுகமாய்
ஆறுதலைப் பொழிந்தபடியிருப்பதாய்
ஒரு கற்பனையை
மூட்டி வளர்த்து குளிர்காய முனைகிறது மனம்.
ஆனால் அதன்மீதே நீரூற்றி
அனைத்தபடியும் இருக்கிறது
அதே மனம்.
.
நம்பிக்கையைத் தொலைத்த அந்த இரவு
நீண்டு கொண்டேயிருக்கிறது..
.
.
இல்லறம்
.
சிந்திக் கிடக்கின்றன..
கண்ணாடித் துண்டுகளும்
காலின் ரத்தமும்
உடைந்து சிதறிய
பாத்திரம் குறித்த
கனவுகளும்
.
பின்னூட்டமொன்றை இடுக