தேடுக

வார்த்தைகள்

If it can be written, or thought, it can be filmed – Stanley Kubrick

எனியோ மோரிகோனி என்னும் இசை மேதை

(ஆனந்த விகடன் 16/03/2016 இதழில் வெளியான ‘தங்கத்தின் பேரானந்தம்!’ கட்டுரையின் மூல வடிவம்)

ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப்-யின் இசைக்கான விருதுகளை இந்த ஆண்டு “ஹேட்ஃபுள் எயிட்” படத்துக்காகப் பெற்றிருக்கிறார், 87 வயது இத்தாலிய இசைமேதை எனியோ மோரிகோனி. Continue reading “எனியோ மோரிகோனி என்னும் இசை மேதை”

இந்திய வணிக சினிமா – XIII

அழுவாச்சி காவியங்கள் மட்டுமல்ல, எந்த வகையான படத்திலும் ஒரு சோகப் பாட்டாவது இருக்கும். வெறும் சோகமாக இல்லாமல் காவிய சோகமாக அது மாறுமென்றால், தத்துவப் பாடலாகப் பரிணமிக்கும்

கண்ணீரைப் பின்தொடர்தல்.

இந்திய நாவல்களில் அதிகமுறை படமாக்கப்பட்டது எது தெரியுமா? சந்தேகமில்லாமல், ‘தேவதாஸ்‘ தான். Continue reading “இந்திய வணிக சினிமா – XIII”

இந்திய வணிக சினிமா – XII

சினிமா, பாதிக்கப்பட்டவர்களின் குரலாக மட்டும்தான் ஒலிக்க முடியும். அல்லலுற்று ஆற்றாது அழுத கண்ணீரோடு நிற்பவர்களின் சார்பாக மட்டுமே அதனால் பேச முடியும். ஏழைகளின், ஆதரவற்றவர்களின் பக்கத்தில் நின்றபடி அதிகாரப் பீடங்களைக் கேள்வி கேட்பதாகவே ஒட்டுமொத்தமாக சினிமா இருக்கிறது என்பதைக் கவனிக்கலாம்

தொழில்நுட்பப் பாலம் Continue reading “இந்திய வணிக சினிமா – XII”

இந்திய வணிக சினிமா – XI

தாய்ப்பாசம் போல ஒரு இயல்பான மனித உணர்ச்சிதான் நமக்கு தேசபக்தியும். ஆகவே எந்தக் கதையாக இருந்தாலும், அதற்குள் தங்கச்சி செண்டிமெண்டைப் போல தேசபக்திக்கும் ஒரு இடத்தைக் கொடுத்துவிட முடியும்

தேசத்தின் குரல் Continue reading “இந்திய வணிக சினிமா – XI”

இந்திய வணிக சினிமா – X

கனவுச் சொர்க்கமும் நரகமும்.
சினிமாவைக் கனவுத் தொழிற்சாலை என்று சொல்வதுண்டு. இருண்ட அரங்குக்குள் அனைத்துப் பார்வையாளர்களும் சேர்ந்து காணும் ஒரு ‘கூட்டுக் கனவு’தானே சினிமா? Continue reading “இந்திய வணிக சினிமா – X”

இந்திய வணிக சினிமா – IX

கிளப் டான்ஸ்.

வெகுமக்கள் இசை, இந்தியாவில் திரை இசையாக மட்டும் இயங்குவது போலவே, வெகுமக்கள் நடனம் என்பதும் திரை நடனம் மட்டும்தான். மரபு நடனங்கள், நாட்டுப்புற நடனங்கள் தவிர்த்து வெகுஜனத்துக்கான ஒரு பொது நடனப்போக்கு இந்தியாவில் திரைப்படங்களில் மட்டுமே இருக்கிறது. Continue reading “இந்திய வணிக சினிமா – IX”

இந்திய வணிக சினிமா – VIII


பொழுதுபோக்கின் பொதுப்போக்கு

இந்திய சினிமாவின் பொற்காலமான 1940கள் முதல் 1960கள் வரையான காலகட்டத்தில் வெளிவந்த இந்திப் படங்களின் முக்கியமான காட்சிகளை முன்வைத்து, வணிக சினிமாவின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியாகத்தான் நான் இந்தத் தொடரை எழுத ஆரம்பித்தேன். இந்தி சினிமாவை ஏன் ஆராய வேண்டும்? ஏனென்றால் அதன் போக்கைப் பின்பற்றித்தான் தமிழ் சினிமாவின் அடிப்படைகள் உருவாகிவந்தன. Continue reading “இந்திய வணிக சினிமா – VIII”

இந்திய வணிக சினிமா – VII


தரமான வணிகம்.

வணிக சினிமா என்று நான் குறிப்பிடுவது மிக அதிகப் பார்வையாளர்களைக் கவரும் நோக்கத்தோடு, அவர்களுக்குச் சிறந்த பொழுதுபோக்கையும், அதை எடுப்பவர்களுக்கு நல்ல வருமானத்தையும் கொடுக்கும் நோக்கத்தோடு எடுக்கப்படுபவை. Continue reading “இந்திய வணிக சினிமா – VII”

இந்திய வணிக சினிமா – VI

மறுஜென்மமும், பேய் பங்களாவும்

மேற்குலகில், 1818யில் மேரி ஷெல்லி எழுதிய அறிவியல் புனைவான ‘ஃபிராங்கன்ஸ்டைன்’ மற்றும் 1897யில் பிராம் ஸ்டோகர் எழுதிய பேய்க்கதையான ‘டிராகுலா’ ஆகிய நாவல்களைப் பின்பற்றி இதுவரை எத்தனைப் படங்கள் வந்திருக்கின்றன என்பதற்குக் கணக்கே இல்லை. போரிஸ் கர்லாஃப், கிறிஸ்டோபர் லீ போன்ற நடிகர்கள் அந்தக் கதாபாத்திரங்களில் நடித்துப் பெரும்புகழ் பெற்றிருக்கிறார்கள். Continue reading “இந்திய வணிக சினிமா – VI”

இந்திய வணிக சினிமா – V


பேசும் படமா? பாடும் படமா?

இந்தியத் திரை உலகம், இசை உலகையும் சேர்த்துத் தானே விழுங்கிவிட்டது என்று முந்தைய பகுதியில் எழுதியிருந்தேன். அது ஒரு கோணம் மட்டுமே. இன்னொரு கோணத்தில், இசை உலகம் திரை உலகத்தை விழுங்கிவிட்டது என்றும் சொல்லலாம். Continue reading “இந்திய வணிக சினிமா – V”

இந்திய வணிக சினிமா – IV

மக்கள் இசை
வெளிநாட்டினர், இந்திய வணிக சினிமா அல்லது பாலிவுட் சினிமா என்றாலே, அதில் பாடல்கள் இருக்கும் என்பதைத்தான் தனித்துவமாகச் சொல்வார்கள். இந்திய சினிமாக்கள் எல்லாமே இசைப் படங்கள் (மியூஸிக்கல்) என்றே அவர்கள் வகைப்படுத்துவார்கள். பாடல் ஆடல் கொண்ட படங்கள் அங்கு மியூஸிக்கல் எனப்படும் ஒரு குறிப்பிட்ட தனி வகையாக மட்டுமே இருக்க, பெரும்பான்மையான படங்களில் பாடல் இருப்பதில்லை என்பது நமக்குத் தெரியும். Continue reading “இந்திய வணிக சினிமா – IV”

இந்திய வணிக சினிமா – III

ராக் ஸ்டார்
வணிக சினிமாவை வெறுப்பவர்கள் முதன்மையாகச் சொல்லும் குற்றச்சாட்டே, நடிகர்களின் பின்னால் வெறிபிடித்து அலையும் இளைஞர்களை, ரசிகர் மன்ற செயல்பாடுகளைப் பற்றியதாகத்தான் இருக்கிறது. உலகில் வேறு எந்த நாட்டிலாவது இந்த மாதிரிப் பைத்தியக்காரத்தனம் உண்டா என்று அவர்கள் கோபமாகக் கேட்கும்போது எனக்கு சிரிப்பாகத்தான் இருக்கும். இவர்கள் உலகில் என்ன நடக்கிறதென்று உண்மையிலேயே தெரிந்துவைத்திருக்கிறார்களா இல்லையா? Continue reading “இந்திய வணிக சினிமா – III”

இந்திய வணிக சினிமா – II

உணர்ச்சிகரம்

இந்திய வணிக சினிமா அளவுக்கு உணர்ச்சிமயமாகக் கதைசொல்லுவது வேறு எந்த நாட்டிலும் இல்லை. காரணம் எளிதுதான், இந்தியர்களே பொதுவாக உணர்ச்சிகரமானவர்கள்தான். இன்று நாம் ஓவர் ஆக்டிங் என்று சொல்லும் பல பழைய நடிகர்களின் நடிப்பு உண்மையில் அன்றிருந்த ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமைந்ததுதான். Continue reading “இந்திய வணிக சினிமா – II”

இந்திய வணிக சினிமா – I

பொதுவாக வணிக சினிமா பற்றி ஆராய்ந்து எழுத யாரும் முன்வருவதில்லை. வணிக சினிமா என்பது மூளை இல்லாதவர்களால் மூளை இல்லாதவர்களுக்காக எடுக்கப்படுவது என்கிற மேட்டிமையான எண்ணம் பொதுவாக எழுத்தாளர்களிடம் இருக்கிறது. ஆனால் வெகுஜன மக்களின் ஆசைகளை, லட்சியங்களை, கனவுகளை, நம்பிக்கைகளை, அவநம்பிக்கைகளை, ஏமாற்றங்களை, கோபங்களை எல்லாம் முழுக்கப் புரிந்துகொண்டவை வணிக சினிமாக்கள்தான். அதை ஆராய்வது ஒருவகையில் எளிய மக்களின் கூட்டு மனத்தை ஆராய்வதுதான் என்று நான் நம்புகிறேன். Continue reading “இந்திய வணிக சினிமா – I”

ஒரு நவீன மந்திரக்கோல்

 imagesசினிமா வட்டாரத்தில் சாதாரணமாகப் பேசிக்கொள்ளும்போதுகூட “ஸ்டாப் பிளாக்கில மறைஞ்சு போயிட்டான்” என்று சொல்வது உண்டு. ஸ்டாப் பிளாக் என்கிற தந்திரம் சினிமாவுக்குள் நுழைந்த மிகப்பழமையான உத்திகளுள் ஒன்று. திரைக்கதையின் அடிப்படை நுட்பங்கள் கூட உருவாகியிருக்காத காலத்திலேயே இந்தத் தொழில்நுட்பம் தோன்றிவிட்டது. அத்தனைப் பழசு. Continue reading “ஒரு நவீன மந்திரக்கோல்”

எரியும் ‘பரதேசி’க் காடு

Paradesi

உழைப்புக்கான கூலியைக் கொடுக்காமல் ஏமாற்றும் கங்காணிகளாகவும் வெள்ளைத் துரைகளாகவும் நடந்துகொள்ளாதீர்கள் நியாயமாரே என்று விமர்சகர்களையும் பார்வையாளர்களையும் நோக்கிக் கூக்குரலிடுகிறது அந்தப் படம் 

Continue reading “எரியும் ‘பரதேசி’க் காடு”

காற்றுக்கு வேலி இல்லை

[டூரிங் டாக்கீஸ் இணையதளத்துக்காக எழுதிய கட்டுரை]

.
CharlesChaplin-TheGreatDictatorசார்லி
சாப்ளின் இயக்கி நடித்த தி கிரேட் டிக்டேட்டர் படத்தில் ஒரு காட்சி வருகிறது- கட்டாயத்தால் இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பயந்த சுபாவமுள்ள நாயகன், போர்க்களத்தில் தன்னுடைய படையுடன் அணிவகுத்துச் செல்கிறான். குண்டுகள் வெடித்து எங்கும் புகைமூட்டமாக இருக்க, அதனூடே அந்தப் படைப்பிரிவு முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறது. குண்டுவெடிப்பு அதிகரிக்க புகைமூட்டமும் அதிகரிக்கிறது, எதிரில் என்ன இருக்கிறதென்று தெரியாத புகைக்குள் நாயகன் செல்கிறான். ஒருகட்டத்தில் புகை குறைந்து காட்சி தெளிவாகிறது, இப்போதும் நாயகன் படையில் அணிவகுத்தபடிதான் சென்றுகொண்டிருக்கிறான், ஆனால் ஏதோ தவறாக இருப்பதாக அவனுக்குப் படுகிறது. Continue reading “காற்றுக்கு வேலி இல்லை”

எல்லாத்துலயும் ஒரு அரசியல் இருக்கு – 3

rajini_3விமர்சகர்களை மட்டும் குறைசொல்ல முடியாது. தமிழகத்தின் சாதாரணப் பார்வையாளர்களிலிருந்து விஷயம் தெரிந்தவர்கள் வரை நாம் எல்லாருமே எல்லாவற்றையுமே அரசியலாக்கித்தான் பார்க்கிறோம். நாம் ரசிக்கும் அல்லது வெறுக்கும் எதையும் ஒட்டுமொத்தமான சூழலில் இருக்கும் நியாய அநியாயங்களோடு இணைத்துக்கொள்ளவே நாம் விரும்புகிறோம். நம்முடைய பண்பாட்டிலேயே இந்தக் குணம் எப்படியோ ஒட்டிக்கொண்டிருக்கிறது. Continue reading “எல்லாத்துலயும் ஒரு அரசியல் இருக்கு – 3”

எல்லாத்துலயும் ஒரு அரசியல் இருக்கு – 2

bicycle-thieves

இணையத்தில் பரவலாகக் கண்ணில்படுவனவற்றை வாசிக்கையில் ஒன்றை உணரமுடிகிறது. ஒரு நல்ல சினிமா என்பது சமகால அரசியலைப் பற்றிப் பேசியிருக்கவேண்டும் என்கிற எண்ணம் நிறையப் பேருக்கு இருக்கிறது. கலையம்சம் என்பதை இரண்டாமிடத்திலேயே வைக்கிறார்கள். ஒரு படம் POLITICALLY CORRECT—ஆக இருக்கிறது என்பதற்காகவே அது எத்தனை மோசமாக இருந்தாலும் கொண்டாடுகிறார்கள். தான் நம்பும் அரசியலுக்கு எதிராக இருக்கிறது என்பதாலேயே ஒரு படம் எவ்வளவு நன்றாக இருந்தாலும் பிடிவாதமாக நிராகரிக்கிறார்கள். Continue reading “எல்லாத்துலயும் ஒரு அரசியல் இருக்கு – 2”

எல்லாத்துலயும் ஒரு அரசியல் இருக்கு – 1

Neerparavai-movie

இணையத்தில் கேபிள் சங்கர் போன்றவர்கள் எழுதுவது ரிவ்வியூ வகை விமர்சனங்கள். ஒரு படம் வெளியானவுடன் சுடச்சுட எழுதப்படுபவை. அதன் வாசகர்கள் அதைப் படித்துப் படத்தைப் பார்ப்பதா வேண்டாமா என்று முடிவெடுக்கிறார்கள். Continue reading “எல்லாத்துலயும் ஒரு அரசியல் இருக்கு – 1”

Create a free website or blog at WordPress.com.

Up ↑